19 மார்ச், 2012

ஆதார் அடையாள எண்

நீண்ட நாட்களாக எனக்குள் ஒரு கேள்வி ஆதார் அடையாள அட்டையை மேம்படுத்தி தனி நபர் அடையாள அட்டைக்கு (Unique identification card) மாற்றாக பயன்படுத்தினால் என்ன ? எதற்காக அரசாங்கம் இரண்டு செலவு செய்ய வேண்டும். ஆதார் அடையாள அட்டைக்கும் தனி நபர் அடையாள அட்டைக்கும் இடையே வேறுபாடு இருந்தால் தனி நபர் அடையாள அட்டையை மட்டும் மத்திய அரசு எற்றுக்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்கிறார். இரண்டுமே மத்திய அரசு நிறுவனம் தான் பதிவு செய்கறது. எதற்காக இந்த முரன்பாடு. 

மேலும் ஆதார் அடையாள அட்டையில் நிறைய மாற்றங்கள் செய்தால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கருப்புப்பணம் பதுக்கலை தடுக்கலாம்

உதாரணம் 1 : புதிய அலைபேசி இணைப்பிற்கு ஆதார் அடையாள அட்டை மூலம் கைரேகையுடன் இணைப்பு வழங்கனால் சமூகவிரோதிகள் அலைபேசி பயன்படுத்துவதை தடுக்களாம்

உதாரணம் 2 :  நிலம் பத்திரபதிவில் சிறு மாற்றங்கள் செய்தால் நிலமோசடி மற்றும் கருப்புப் பண முதலீடு தடுக்கப்படும். முக்கியமாக பழைய பதிவுகளும் நில உரிமையாளர் கைரேகையுடன் மறுபதிவு செய்யவேண்டும். இதற்கு காலதாமதம் ஆகும். ஆனால் இந்த காலதாமதம் கருப்புப்பணத்தால் ஆகும் இழப்பை விட மிக குறைவே

உதாரணம் 3 : இழப்பீடுகளை உரிய நபர்களின் வங்கி கணக்கில் மட்டும் தான் செலுத்த வேண்டும். இலவசங்களை உரிய நபர்களின் கைரேகையுடன் செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் துறை அதிகாரி தகுந்த பதில் அளிக்க வேண்டும். 

இதைப்போல் நிறைய உதாரணங்கள் இந்த வலைப்பூவில் தொடரும்.

வருங்கால இந்தியாவை மூன்று மிக முக்கியமான எண்கள் ஆளும் என்று  திரு நந்தன் நில்கர்னி அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று எண்கள்

1. தனி நபர் அடையாள எண்
2. வங்கிக் கணக்கு எண்
3. அலைபேசி எண்

மீண்டும்...

04 ஜனவரி, 2012

சமூக பார்வை


நீங்கள் செல்லும் இடத்தில் மற்றவரது ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிரந்திர கணக்கு எண், பாஸ்போட் புத்தகம், அடையாள அட்டை இவற்றை கண்டால் எடுத்து அருகாமையில் உள்ள தபால் நிலையத்தில் ஒப்படைக்கவும் அல்லது தபால் பெட்டியில் போடவும்.

அந்த பொருள் உரிய நபர்களிடம் தபால் நிலையம் மூலமாக தகுந்த அபராதத்துடன் ஒப்படைக்கப்படும்.

மத்திய அரசு இதற்கு என ஒரு சட்டம் வகுத்துள்ளது.

ஆதலால் முடிந்த வரை மேற்கண்ட பொருள்களை தாமதமில்லாமல் ஒப்படைத்தால் உரிய நேரத்தில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

இந்த தகவலை எனக்கு தெரிவித்த நன்பர் செந்தில்குமார் கிருஷ்ணசாமி அவர்களுக்கு நன்றி

தொடர் வண்டி புகார் அலைபேசி எண் 81212 81212



தொடர் வண்டி சம்மந்தமாக அல்லது தொடர் வண்டி நிலையத்தில் எதாவது குறைபாடு இருந்தால் 81212 81212 எண்ற அலைபேசி எண்ணிற்கு புகார் ஒன்றை குறுதகவல் (SMS) மூலம் அனுப்பினால் உடனடியாக குறைபாடு சரிசெய்யப்படும்.

உடனடியாக உங்களது அலைபேசி எண்ணிற்கு நன்றியுடன் குறைபாடு சரி செய்யப்பட்டதற்கான தகவலும் வரும்.

இதை சரியாக பயன்படுத்தி தொடர் வண்டியில் நமது பயனத்தை  நிம்மதியாகவும் மனநிறைவுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

இந்த தகவலை எனக்கு தெரிவித்த நன்பர் சரவணன் பரமசிவம் அவர்களுக்கு நன்றி