19 மார்ச், 2012

ஆதார் அடையாள எண்

நீண்ட நாட்களாக எனக்குள் ஒரு கேள்வி ஆதார் அடையாள அட்டையை மேம்படுத்தி தனி நபர் அடையாள அட்டைக்கு (Unique identification card) மாற்றாக பயன்படுத்தினால் என்ன ? எதற்காக அரசாங்கம் இரண்டு செலவு செய்ய வேண்டும். ஆதார் அடையாள அட்டைக்கும் தனி நபர் அடையாள அட்டைக்கும் இடையே வேறுபாடு இருந்தால் தனி நபர் அடையாள அட்டையை மட்டும் மத்திய அரசு எற்றுக்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்கிறார். இரண்டுமே மத்திய அரசு நிறுவனம் தான் பதிவு செய்கறது. எதற்காக இந்த முரன்பாடு. 

மேலும் ஆதார் அடையாள அட்டையில் நிறைய மாற்றங்கள் செய்தால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கருப்புப்பணம் பதுக்கலை தடுக்கலாம்

உதாரணம் 1 : புதிய அலைபேசி இணைப்பிற்கு ஆதார் அடையாள அட்டை மூலம் கைரேகையுடன் இணைப்பு வழங்கனால் சமூகவிரோதிகள் அலைபேசி பயன்படுத்துவதை தடுக்களாம்

உதாரணம் 2 :  நிலம் பத்திரபதிவில் சிறு மாற்றங்கள் செய்தால் நிலமோசடி மற்றும் கருப்புப் பண முதலீடு தடுக்கப்படும். முக்கியமாக பழைய பதிவுகளும் நில உரிமையாளர் கைரேகையுடன் மறுபதிவு செய்யவேண்டும். இதற்கு காலதாமதம் ஆகும். ஆனால் இந்த காலதாமதம் கருப்புப்பணத்தால் ஆகும் இழப்பை விட மிக குறைவே

உதாரணம் 3 : இழப்பீடுகளை உரிய நபர்களின் வங்கி கணக்கில் மட்டும் தான் செலுத்த வேண்டும். இலவசங்களை உரிய நபர்களின் கைரேகையுடன் செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் துறை அதிகாரி தகுந்த பதில் அளிக்க வேண்டும். 

இதைப்போல் நிறைய உதாரணங்கள் இந்த வலைப்பூவில் தொடரும்.

வருங்கால இந்தியாவை மூன்று மிக முக்கியமான எண்கள் ஆளும் என்று  திரு நந்தன் நில்கர்னி அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று எண்கள்

1. தனி நபர் அடையாள எண்
2. வங்கிக் கணக்கு எண்
3. அலைபேசி எண்

மீண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக